தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீ இல்லாத வாழ்க்கை!

* விரும்பியபடி வாழ்க்கை

இங்கு

சிலருக்கு மட்டுமே

அமைகிறது - பலருக்கு

விதியின் விருப்பப்படியே

நடக்கிறது!

* காயம் தந்த

உன்னையும்

நேசிக்க கற்றுத் தந்து...

நீ தந்த

சோகத்திலும்

சுகம் காணும்

பக்குவம் தந்திருக்கிறது

காலம்!

* நீ இல்லாத

வாழ்க்கை

பெருஞ் சுமையாய்

கனக்கிறது!

* மறக்கத்தான் நினைக்கிறேன்

உன்னை,

எங்கே மனம்

மறக்கிறது!

* காயத்தையும்...

சோகத்தையும்...

உள்ளுக்குள் சுமந்து

கொண்டு...

உதடுகளால்

புன்னகைத்துக் கொண்டே தான்

வாழ வேண்டியிருக்கிறது

என்ன செய்வது?

செந்தலை நெப்போலியன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us