தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!

கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!

கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!


PUBLISHED ON : பிப் 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஒரு ஐந்தெழுத்து வார்த்தை...

அந்த வார்த்தை எனும்

தண்டவாளத்திலேயே

எல்லாரின் வாழ்க்கை

ரயிலும் ஓடி கொண்டிருக்கிறது!

* அதனால் தான்

உலகம் விடிகிறது...

இயற்கை தன்னை

புதுப்பித்துக் கொள்கிறது!

* சூரிய ஒளியால்

இயற்கை புத்துயிர்

பெறுவது போல —

* ஓடும் நதிகள் யாவும்

சமுத்திரத்தை

அடைவது போல —

* உணவைத் தேடி

எறும்புகள் ஊர்வலம்

தொடங்குவது போல —

*இந்த வார்த்தையை பின்பற்றி

மனிதகுலம் அடிக்கடி தன்னை

உயிர்ப்பித்துக் கொள்கிறது!

* வலிகளும், வேதனைகளும்

ரத்தமும், மரணங்களும்

நிறைந்த வரலாற்றை

தாங்கிக் கொள்ளவும் —

* நிகழ்காலத்தையும்,

எதிர்காலத்தையும்

வலிமையோடு எதிர்கொள்ளவும்

இந்த வார்த்தையே

பயன்படுகிறது!

* மரணத்திடம் மாட்டிக் கொண்டு

போராடுபவர்களுக்கும்,

சோதனைகளால் வருந்துபவர்களுக்கும்,

வேதனையால் துடிப்பவர்களுக்கும்

இந்த வார்த்தையே

வேத வாக்கு!

* தொடர் துன்பங்களால்

இந்த வார்த்தையை

மறந்தவர்கள் உண்டு!

* அவர்களையும் இந்த

வார்த்தை எங்கோ ஒளிந்திருந்து

காப்பாற்றிக் கொண்டிருக்கிறது!

*அந்த வார்த்தைக்கு

அழிவே இல்லை...

அது அழிந்தால்

உலகமே இல்லை!

*அந்த வார்த்தை...

நம்பிக்கை!

— எம்.ஸ்ரீராம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us