PUBLISHED ON : செப் 19, 2021

அ நிறம் | அளவு
உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகள், மழையின் காரணமாக திறக்க முடியாமல் பிடித்துக் கொண்டால், கோல மாவுடன் உப்பு துாளை கலந்து, ஜன்னல் விளிம்பில் துாவுங்கள்; மழைக்காலத்திலும் மிகவும் எளிதாக திறக்கலாம்
* மழை மற்றும் குளிர் காலத்தில், வீட்டில் உள்ள மிதியடியின் அடியில், செய்தித்தாளை விரித்து வைத்தால், சில்லிட்டு போகாமல் இருக்கும்
* மழைக்காலத்தில், உப்பு ஜாடியில் மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஈரம் கசியாது
* நனைந்த மழை கோட்டுக்குள், பழைய செய்தித்தாள்களை போட்டு மடித்து வைத்தால், விரைவில் உலர்ந்து விடும்
* மழைக்காலத்தில், தரை குளிர்ச்சியாய் இருக்கும்; அதனால், தரையில் செய்தித்தாளை விரித்து, அதன் மேல் பாயை விரித்து படுத்தால், குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது.
