PUBLISHED ON : செப் 17, 2017

பச்சைப்பயறு, காராமணி சுண்டல்களுக்கு வெல்லமும், தேங்காய்த்துருவலும்; கொண்டைகடலைக்கு காரப் பொடியும் சேர்த்தால், ருசி அலாதியாக இருக்கும்.
* சுண்டல் வகைகளை வேக வைக்கும் போது, உப்பு சேர்ப்பதன் மூலம், சுண்டல், 'நறுக் நறுக்' என்று இருக்கும். இதை தவிர்க்க, சுண்டலை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன், தூள் உப்பை போட்டு நன்றாக கிளறி இறக்குங்கள்; மெத்தென்று இருக்கும்.
* முதல் நாள் சர்க்கரை பொங்கல்; இரண்டாம் நாள், தயிர் சாதம்; மூன்றாம் நாள், வெண் பொங்கல்; நான்காம் நாள், எலுமிச்சை சாதம்; ஐந்தாம் நாள் புளியோதரை; ஆறாம் நாள் தேங்காய் சாதம்; ஏழாம் நாள் கற்கண்டு சாதம்; எட்டாம் நாள் சர்க்கரை பொங்கல் மற்றும் ஒன்பதாம் நாள் அக்கார அடிசல் ஆகியவை, நைவேத்தியத்தில் இடம் பெற வேண்டும்.
* கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்போருக்கு, தேங்காய்த்துருவல் சேர்க்காத சுண்டலை தனியாக எடுத்து வைக்கலாம்.
* கடலையை வேக வைக்கும் போது, சோடா உப்பு சேர்க்கக் கூடாது.

