sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஆக 23, 2015

Google News

PUBLISHED ON : ஆக 23, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரியமானவனே!

திருவிழாவில்

மாவிலை தோரணம் கட்டி

வானத்தை அழகூட்டிக் கொண்டிருந்தாய்

எனக்குன்னை மிகவும் பிடித்தது!

தோரணத்தில் ஆங்காங்கே

பூக்களை செருகியபடி

நறுமணமிக்கப் பார்வையால்

அவ்வப்போது

எனக்குள் உன்னை

புரிய வைத்துக் கொண்டிருந்தாய்!

நீர்த்தெளித்து கோலமிடும்

பெண்களுடன் நின்றிருந்தேன்

கோலத்தை ஒளிப்படம்

எடுக்கும் பாவனையில்

என்னை மட்டுமே

ரசித்துக் கொண்டிருந்தாய்!

சுள்ளிகளை இட்டு

அடுப்பில் பொங்கல் வைக்கும்

பெண்களுடன் கூடி

நானும் தீயிட்டேன்

தூரத்து சூரியனாய்

புன்னகைத்துக் கொண்டிருந்தாய்!

சாமிக்கு படையலிட்டு

சர்க்கரைப் பொங்கல் தந்தபோது

இனிக்கிறது இதயம் என்றாய்!

உன் சொற்களில்

உலகமே இனித்தது எனக்கு!

மறுநாள் ஊருக்கு கிளம்புகையில்

'திரும்ப எப்போ வருவே...'

ஏக்க விழிகளோடு

என்னை ஏறிட்டு நோக்கினாய்!

பிரியமானவனே...

உன் ஊரிலேயே

செத்து விட தோன்றியது

எனக்கு!

இ.எஸ்.லலிதாமதி, சென்னை.






      Dinamalar
      Follow us