PUBLISHED ON : ஜூலை 10, 2022

அ நிறம் | அளவு
* சமையலறையிலுள்ள அலமாரிகளை சுத்தம் செய்த பின், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை ஒரு மக் தண்ணீரில் கரைத்து, அதனால் அலமாரித் தட்டுகளை துடைக்கவும். பிறகு பேப்பர் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து சமான்களை அடுக்கவும். 15 நாள் வரை மனதுக்கு இதமான மணத்துடன் அலமாரிகள் இருக்கும்
* பாத்ரூமில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால், துர் வாடை மறைந்து விடும்
* வாஷ்பேசின், சிங்க் போன்றவைகளில் துர் வாடையை தவிர்க்க, அவற்றில் ஓரிரு ரச கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
