PUBLISHED ON : ஜூலை 24, 2022

* யூடிகோலோனில் பஞ்சை நனைத்து, 'ஸ்டெபிலைசர்' மீது வைத்தால், அறையில் நாள் முழுவதும் மெல்லிய நறுமணம் வீசிக்கொண்டிருக்கும்
* வாழ்த்து மடல்கள் மீது, சிறிது வாசனை திரவியத்தை பூசி அனுப்புங்கள். பெறுபவர் மனதை அந்த மணம் கொள்ளை கொள்ளும்
* பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில்களில் வரும் வாடையை போக்க, சமையல் சோடா கரைத்த தண்ணீரால் நிரப்பி, அடுத்த நாள் கழுவி காய விடவும்
* ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை கிண்ணத்தில் போட்டு, 'பிரிஜ்'ஜில் வைத்தால், பலவித உணவுகளின் கலப்பட வாடையை போக்கும். மாதம் ஒருமுறை, புதிய சமையல் சோடா வைக்கவும்
* கர்ச்சீப்கள், உள்ளாடைகளை துவைத்தபின் சிறிது யூடிகோலோன் கலந்த வாசனை நீரில் அலசிக் காயவிடவும். அவற்றை உபயோகிக்கும்போது மிகவும், 'ப்ரெஷ்' ஆக உணர்வீர்கள்.
* செருப்பு அலமாரியில், சிறிது, 'ரூம் ப்ரெஷ்னர் ஸ்ப்ரே' செய்தால், ஷூக்களும், செருப்புகளும் நல்ல மணத்துடன் இருக்கும். தோல் வாடை நீங்கி விடும்.

