
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், மகிஷாசுரமர்த்தினி என்றும், துர்கமாசுரனை அழித்ததால், துர்கா என்றும் பராசக்திக்கு பெயர் ஏற்பட்டது. துக்கம், பயம், தரித்திரம் இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றுபவள், துர்க்கை. இவளை, சர்வ தேவதா ஸ்வரூபிணி, சர்வ மந்திர, யந்திர ஸ்வரூபிணி என்று போற்றுகின்றன, மந்திர சாஸ்திரங்கள்.
துர்க்கைக்கு ஒன்பது ரூபங்களும், பெயர்களும் உண்டு. அவை: சூலினி துர்க்கை, வன துர்க்கை, சாந்தி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தீப துர்க்கை, சபரீ துர்க்கை, ஆசூரீ துர்க்கை மற்றும் லவண துர்க்கை.