sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இருபது பைசா கடனாளியான டாடா!

/

இருபது பைசா கடனாளியான டாடா!

இருபது பைசா கடனாளியான டாடா!

இருபது பைசா கடனாளியான டாடா!


PUBLISHED ON : டிச 15, 2013

Google News

PUBLISHED ON : டிச 15, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, 'டிவி' செய்தி யாளர் ஒருவருக்கு, 20 பைசா கடன்காரராக இருந்திருக்கிறார். தூர்தர்ஷன் துவங்கிய போது, டாடாவை பேட்டிக்கு அழைத்தனர். பேட்டி அளிப்பவருக்கு, தூர்தர்ஷன் சார்பில், சன்மானம் அளிப்பது வழக்கம். பேட்டி முடிந்த போது, டாடாவுக்கு 200 ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டதாக, ரசீதில் கையெழுத்து போட வேண்டும். அப்போது, தூர்தர்ஷனில் ரசீது கட்டணமாக, 20 பைசா வசூலிப்பர். ஆனால், அச்சமயம் டாடாவிடம் சில்லரை இல்லாததால், பேட்டி எடுத்த சசிகுமார், 20 பைசா கொடுத்து உதவினார்.

அதன்பின், பல ஆண்டுகளுக்கு பின், நிருபரை சந்தித்த டாடா, 'உங்களை, எங்கேயோ சந்தித்து இருக்கிறேன்...' என்றார். 'தூர்தர்ஷனில் உங்களை பேட்டி எடுத்திருக்கிறேன்...' என்று சொன்னார் சசிகுமார். உடனே, 'அடடே... நான் உங்களுக்கு 20 பைசா கடனாளி ஆச்சே...' என்று கூறி சிரித்த டாடா, 'ஆனால், இப்போதும் எங்கிட்ட பைசா இல்லை...' என்று கூறி சென்றுவிட்டார். — ஜோல்னா பையன்.






      Dinamalar
      Follow us