sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க.கதிரேசன், சென்னை: மனிதர்கள், 50 வயதைக் கடந்து விட்டால், மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

மறதி என்பது, கவனக்குறைவு இருந்தால் மட்டுமே ஏற்படும்; அது எந்த வயதில் இருந்தாலும்!

கவனத்தோடு இருந்தால், 120 வயதானாலும் மறதி ஏற்படாது!

ஆர், ராஜ்மோகன், முட்டியூர், விழுப்புரம்: 'பா.ஜ.,வை, பிராமணர்கள் மட்டும் அல்லாது, தமிழர்கள் யாருமே நம்பக் கூடாது...' என்கிறாரே, நடிகர் எஸ்.வி.சேகர்?



இவர் எந்தக் கட்சிக்குப் போனாலும், பதவியை எதிர்பார்க்கிறார்; அதை யாரும் கொடுப்பதில்லை. அதனால், இப்படி எல்லாம் பேசுகிறார்! 

எம்.ராஜேந்திரன், லால்குடி: நாவல் எழுதுவது கடினமா... சிறுகதை எழுதுவது கடினமா?

நாவல் எழுதுவது சுலபம்; நீளமாக எழுதி முடிவைச் சொல்லி விடலாம்.

சிறுகதை எழுத-

* மூன்று அல்லது நான்கு கதாபாத்திரம் தான் இருக்க வேண்டும்.

* கருத்தையும் சுருங்கச் சொல்லி, முடிவையும், 'பாசிட்டிவ்' ஆக சொல்ல வேண்டும்!

* சி.சசிகலா, விருதுநகர்: இன்றைய அரசியல்வாதிகள், மேடையில் பேசும்போது, எழுதி வைத்துக் கொண்டு வாசிக்கின்றனரே...



அதையாவது சரியாக படிக்க வேண்டுமே... பெரும்பாலானோருக்கு, தமிழே தெரிவதில்லை; தப்பும் தவறுமாக அல்லவா படிக்கின்றனர்!

* பா.ஜெயக்குமார், வந்தவாசி: 'பெண் கல்வியை, அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...



நல்லது தான்; அவரே செய்யலாமே!

டி.ஜெயசிங், கோவை: நடிகர் நெப்போலியனின் உடல் ஊனமுற்ற மகனை, நல்ல முழு உடல் தகுதி உள்ள பெண் மணந்து உள்ளது எதைக் காட்டுகிறது?



அந்தப் பெண்ணின் பெருந்தன்மையைக் காட்டுகிறது!

எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: 'லென்ஸ் மாமா' என்று சொல்வதற்கு காரணம், அவர் போட்டோகிராபர்; 'நடுத்தெரு நாராயணன்' என்று சொல்வதற்கு காரணம் என்ன?

தெருத் தெருவாக பழைய புத்தக கடைகளைத் தேடி அலைந்து, தகவல் திரட்டுவதால் அவர், 'நடுத்தெரு' நாராயணன்!

ஆர்.சேஷாத்ரி, சென்னை: கேள்வி வெளியாவதற்கு, 'சீனியர், நிரந்தர வாசகர், சந்தாதாரர்' என்ற தகுதிகள் வேண்டுமா?



அதெல்லாம் கிடையவே கிடையாது. நீங்கள் தான் ஒவ்வொரு முறையும், குறைந்தபட்சம், 20 கேள்விகள் எழுதி அனுப்புகிறீர்களே... அனைத்தையும் படித்து விடுகிறேனே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us