sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 22, 2024

Google News

PUBLISHED ON : டிச 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அ.மீனாட்சி, கன்னியாகுமரி: சிலர், தாங்கள் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே... இதற்கு என்ன காரணம்?

எந்த பணியாக இருந்தால் என்ன... வெற்றியாளர்களாக வந்து விடுகின்றனரே!

ஆர்.வள்ளியம்மாள், சென்னை: அந்துமணி கேள்வி - பதில் புத்தக தொகுப்பின் சர்க்குலேஷன் எப்படி?

அச்சடிக்க அடிக்க காலியாகி விடுகிறது!

பிரான்சிஸ்கா, சென்னை: எல்லா ஜோக்குகளையும் படிப்பீர்களா?

அனைத்து ஜோக்குகளையும், பொறுப்பாசிரியர் தான் படிப்பார்; அவர் தான் தேர்வு செய்வார்!

பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால், தொடர்ந்து, பார்லி.,யின் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டு, நம் வரிப்பணம் வீணாகிறதே?

அவர்களைத் தேர்வு செய்து, சபைக்கு அனுப்புவது, நம் தவறு தான்!

க.கல்பனா, சென்னை: 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' நுால் வெளியீட்டு விழாவில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளாதது, தி.மு.க., தந்த நெருக்கடியா?

வேறு என்னவாக இருக்க முடியும்?

* சி.வெங்கடேஷ், சென்னை: 'டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்...' என, ஸ்டாலின் சொன்னது, அதை தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையாக எடுத்துக் கொள்ளலாமா?

அவரது மகனை முதல்வராக அமர்த்தி, இவர் பதவி விலகி விடுவார்!

பி.அனுமந்த்ரா, சென்னை: தன் மகனை முதல்வர் பதவியில் அமர்த்திப் பார்க்க விரும்பும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் மக்களைக் கூட பார்த்து, ஆறுதல் கூறவில்லையே?

அவருக்கு வயதாகி விட்டது; வெள்ளத்தில் எல்லாம் நடக்க முடியாது!

எஸ்.எம்.தங்கமீனாள், அலவாக்கோட்டை, சிவகங்கை: அந்துமணியாரிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள் எது?

வாசகர்களான முதலாளிகளின் அன்பு!






      Dinamalar
      Follow us