
* ஒரு துணியை தண்ணீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்து, சிலிண்டரை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு முறை துடைக்கவும். அது உலரும் வரை காத்திருக்கவும். இப்போது துடைத்த இடத்தில், கேஸ் இல்லாத பகுதி வேகமாக உலரும். கேஸ் இருக்கும் பகுதி சற்று ஈரப்பதத்துடன் அப்படியே இருக்கும். எதுவரை கேஸ் இருக்கிறது என, என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
* சிலருக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, விகாரமாக இருக்கும்; நடந்தால் வலிக்கும். இதை, பித்த வெடிப்பு என, கவனிக்காமல் விட்டு விடுவர், சிலர். பாத வெடிப்புள்ளவர்கள் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின் பாதங்களை நன்கு துடைத்து, ஒரு தேக்கரண்டி கிளிசரின், ஒரு தேக்கரண்டி பன்னீர், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வெடிப்புகள் மீது பூசி வர, வெடிப்புகள் காணாமல் போகும்
* மாதுளம் பழங்களை எளிமையாக உரிக்க, மாதுளையின் மேல் பகுதியை முதலில் இளநீர் சீவுவது போல் வெட்டி எடுத்து விடுங்கள். பிறகு, வெள்ளை பகுதிகள் உள்ள இடத்தை கீறி, பழத்தை விரித்தால், மாதுளை முத்துக்களை எளிதில் எடுக்கலாம்.

