sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - வரம்!

/

கவிதைச்சோலை - வரம்!

கவிதைச்சோலை - வரம்!

கவிதைச்சோலை - வரம்!


PUBLISHED ON : செப் 15, 2024

Google News

PUBLISHED ON : செப் 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மறதியே வா...

என்னை உன் வசமாக்கிக் கொள்...

உன் அரவணைப்பில் தான்

நிம்மதி கிடைக்குமென்றால்

உன்னை நான் விடப்போவதில்லை!

* அறியா வயதில்

தெரிந்தும் தெரியாமலும்

செய்த தவறுகளை

என்னிடமிருந்து மறக்க செய்ததால்

குற்ற உணர்ச்சி இல்லாமல்

வாழ முடிகிறது!

* பருவ வயதில்

எனக்கு ஏற்பட்ட

புறக்கணிப்புகள்

ஏமாற்றங்கள்

மறதியால் மூழ்கடிக்கப்பட்டதும்

வாழ்க்கை பிடிப்பட்டது!

* கல்லுாரி நாட்களில்

நண்பர்களுடன் ஏற்பட்ட

வார்த்தை சண்டைகளும், மோதல்களும்

மறக்கடிக்கப்பட்டதால்

இனிய நட்பை தொடர முடிகிறது!

* குடும்ப வாழ்க்கையில்

உறவுகளுக்குள் ஏற்பட்ட

நெருடல்கள் மனக் கசப்புகள்

மறதி எனும் வரத்தால்

இன்றும் இனிதாக உறவாட முடிகிறது!

* வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்

செய்த தவறுகளும்

மன உளைச்சல்களும்

மறதியால் மறந்து போனதால்

தெளிவான மனதுடன்

அனைவருடனும் அளவளாவ முடிகிறது!

* மீதமுள்ள வாழ்நாளையும்

பக்குவப்பட்ட மனதுடன் வாழ

உறவுகளுடனும், நட்பு வட்டத்துடனும்

இனிமையாக பயணிக்க மறதியே வா!

* மறதி நோயல்ல - அது இனிய வரம்!

செல்வி நடேசன், சென்னை.






      Dinamalar
      Follow us