PUBLISHED ON : அக் 06, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முயற்சிக்காமல் கிடைத்திடும்
வெற்றியை விரும்பாதே - அது
யாராலும் மதிக்கப்படாது!
உழைக்காமல் பெற்றிடும்
ஊதியத்தை விரும்பாதே - அது
நற்காரியத்திற்கு செலவாகாது!
சுயநலமாக வாழ்ந்திடும்
வாழ்க்கையை விரும்பாதே - அது
அர்த்தமுள்ளதாக இருக்காது!
குறுக்கு வழியில் வாங்கிடும்
பதவியை விரும்பாதே - அது
மாண்பை சேர்க்காது!
வற்புறுத்தி இணைத்திடும்உறவுகளை விரும்பாதே - அது
ஆயுளுக்கும் நிலைக்காது!
மோசடியில் அடைந்திடும்
வளர்ச்சியை விரும்பாதே - அது
நீண்ட நாள் தொடராது!
அச்சுறுத்தி அனுபவித்திடும்
மகிழ்ச்சியை விரும்பாதே - அது
அன்றாடம் கிடைக்காது!
அதிகாரத்தால் வந்திடும்
நன்மைகளை விரும்பாதே - அது
நற்பெயரைக் கொடுக்காது!
— இந்திராணி ஆறுமுகம், கடலுார்.