PUBLISHED ON : டிச 15, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு
கேட்கப்படுகிறது
பல மாநிலங்களில்
பல தலைவர்களால்!
பல ஆயிரம் ஜாதிகள்
இந்த நாட்டில்
சிலர் தலைவர்களாக
இருக்க ஜாதிகள்
தேவைப்படுகிறது!
மக்கள் ஒற்றுமையாக
அமைதியாக வாழ
ஜாதி சங்கங்கள்
ஒழிக்கப்பட வேண்டும்!
ஏழை, எளியவர்களை
கிராமப்புற பாமரர்களை
ஏற்றம் பெறச் செய்ய
பல வழிகள் உண்டு!
கல்விக்கும்
வேலை வாய்ப்பிற்கும்
மட்டுமே இட ஒதுக்கீடு
தேவைப்படுகிறது!
அந்தந்த சமூகத்தில்
வேலை வாய்ப்பு பெற்றவர்கள்
உயர்ந்தவர்கள்
செல்வந்தர்கள்!
பின் தங்கிய மாணவ
மாணவியரை ஆளுக்கொருவர்
தத்தெடுத்து படிக்க
வைத்தால் போதும்...
ஜாதி மதம் பாராத
தொண்டு நிறுவனங்கள்
தன்னார்வலர்கள் இங்கு
ஏராளம் ஏராளம்!
அரசின் ஆணைகளை விட
நல் மனிதர்களின் உதவிகள்
எப்போதும் வாழ வைக்கும்
எல்லாரையும்!
- சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.