/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - தை பிறந்தால் வழி பிறக்கும்!
/
கவிதைச்சோலை - தை பிறந்தால் வழி பிறக்கும்!
PUBLISHED ON : ஜன 12, 2025

பழையன கழிந்து
புதியன புகுத்தி
சுத்தம் செய்யும் திருவிழா
போகிப் பண்டிகை!
அறுவடை முடிந்து
புது நெல்மணிகளை
குத்தி அரிசியாக்கி...
புது மண்பானை
வைத்து இஞ்சி
மஞ்சள் கொத்து கட்டி...
சூரிய ஒளி படர்ந்திடகரும்பும், பழமும்
வைத்து புதுப்பொங்கல்
திருவிழா!
குலவு சத்தம்
கேட்கும் நடுவில்
பொங்கலோ பொங்கல்
பெரும் ஒலி...
வாயில்லா ஜீவனுக்கும்
நெல்லி மாலை, நெட்டி மாலை
அலங்காரம் படையல்
மாட்டுப் பொங்கல்...
வீர தீர விளையாட்டு
ஜல்லிக்கட்டு போட்டி
பெண்களின் கும்மியடி கூட்டம்...
தமிழர்களின் திருநாள்
மண்வாசம் பெருகி
மனிதநேயம் உருகி
உறவுகளை, நட்புகளை...
சேர்க்கும் சமத்துவ பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று காட்டும் பெருவிழா!
— ஆர். சீதாராமன், சீர்காழி.