sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!

/

கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!

கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!

கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!


PUBLISHED ON : மார் 09, 2025

Google News

PUBLISHED ON : மார் 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிதியாய் வந்த பறவைக்கு

அடைக்கலம் கொடுத்தது மரம்

அழகாய் கூடமைத்துக்கொள்ள

கொஞ்சம் குச்சிகளையும் தந்தது!

வெயிலில் இளைப்பாறிக் கொள்ள

தன கிளைக் கரங்களால்

தண் குடைப்பிடித்தது!

முட்டைகள் இடுவதற்கு

மென் நரம்புகள் பின்னலிட்ட

சருகுகளை தந்தது!

பொந்துகள் கொத்தி

கதகதப்பாய் வாழ்ந்து கொள்ள

தன் தேகத்தையே கொடுத்தது!

குஞ்சுகள் பொரித்து,

கீச் குரல் கேட்டதும்

பஞ்சு உடையாய் பூக்களையும்

பரிசாய் கனிகளையும் ஈந்தது!

அடை மழைக்கும்

ஆகாயத்தை அசைக்கும் காற்றுக்கும்

அரணாய் காத்து நின்றது!

இறக்கை முளைத்த குஞ்சுகளுடன்

தாய்ப் பறவை

திசை மாறிப் பறந்ததும்...

பிரிவாற்றாமையால்

அழுது துடித்தது மரம்

பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்ட

பெற்றோரைப் போல!

- இ.எஸ். லலிதாமதி, சென்னை






      Dinamalar
      Follow us