/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!
/
கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!
PUBLISHED ON : ஏப் 06, 2025

* முயற்சியின் தொடக்கம்
தோல்வி என்றால்
விடாமுயற்சியின் முடிவு
வெற்றியின் ஆரம்பம்!
* பயமும் தயக்கமும்
நம்மிடம் இல்லை என்றால்
செயலும் பாதையும் ஒரே
நேர்க்கோட்டில் செல்லும்!
* ஊக்கமும் திறமையும்
உள்ளத்தில் வேரானால்
சாதிக்கும் சக்திகள்
ஆல விருட்சமாக வளரும்!
* நிதானமும் எளிமையும்
இரு கண்களானால்
என்னாளும் வாழ்க்கை
சிக்கலாக மாறாது!
* எதிர்கால லட்சியத்தை
வலுவாக முயற்சி செய்
அதை செய்து முடிக்கும்
மனஉறுதி தானே வரும்!
* சிந்தித்து செயல்படும்
ஆற்றலை உறுதி செய்
அதுவே மிகச் சிறந்த
வெற்றியின் நம்பிக்கை!
* பொறுமையும் மவுனமும்
பகைமை வீழும் ஆயுதம்
தேவையான நேரங்களில்
கடைபிடிக்க முயற்சி செய்!
* தோல்வி நிரந்தரமல்ல
காரணத்தை தேடாதே
வெற்றியின் காரணிகள்
கண்டறிய முயற்சி செய்!
* உயர்வு மூச்சு என்றால்
இலக்கை சுவாசம் செய்
அஞ்சாமை தடம் பதித்து
ஆற்றும் திறன் பதிவிடு!
* சில படிப்பினைகள்
உள்ளத்தில் வலி தரலாம்
அதை வலிமையோடு
அனுபவமாக மாற்றிவிடு!
—வி.சுவாமிநாதன், சென்னை.
மொபைல் எண் : 93603 83220