sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: மனிதன்!

/

கவிதைச்சோலை: மனிதன்!

கவிதைச்சோலை: மனிதன்!

கவிதைச்சோலை: மனிதன்!


PUBLISHED ON : ஆக 10, 2025

Google News

PUBLISHED ON : ஆக 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவறு செய்யும்

வாய்ப்பிருந்தும்

அதைத் தவிர்ப்பவனே

நல்லவன்!

அறிவை அறிவாலும் சூழ்ச்சியை சூழ்ச்சியாலும்

வெல்லத் தெரிந்தவனே

வல்லவன்!

தெருவுக்குத் தெரு

கடை இருப்பினும்

குடிக்காதவனே நல்ல

குடிமகன்!

ஓட்டுரிமையை காசு பொருளுக்கு

விற்காதவனே சிறந்த

வாக்காளன்!

வறுமையிலும்

சிறுமை புரியாது

வாழ்பவனே

மாவீரன்!

முடிந்தவரையிலும் முடியாத போதும்

உதவ ஓடி வருபவனே

நண்பன்!

எந்த நிலையிலும்

அன்னை தந்தையை

காக்கின்றவனே

தவப்புதல்வன்!

வாய்மையும்

நேர்மையும் சேர

வாழ்பவனே

மனிதன்!

தீமை செய்தோர்க்கும்

நன்மை செய்துவிட்டு

அதை மறப்பவனே

புனிதன்!

தேசமும், தெய்வமும்

இரு கண்களெனப்

போற்றுபவனே

இந்தியன்!

  அ.கங்காதரன், புதுச்சேரி.






      Dinamalar
      Follow us