sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து: வேப்பிலை!

/

நம்மிடமே இருக்கு மருந்து: வேப்பிலை!

நம்மிடமே இருக்கு மருந்து: வேப்பிலை!

நம்மிடமே இருக்கு மருந்து: வேப்பிலை!


PUBLISHED ON : ஜூலை 13, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி மாதம் அம்மனின் மாதம் என, அழைப்பர். இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தும், அம்மனுக்கு உரியதாகும். அதில், அம்மனுக்கு மிகவும் பிடித்தது வேப்பிலை. ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் மிகப்பெரிய கடமையை செய்கிறது. வேப்பிலையின் மருத்துவப் பயன்களை காண்போம்.

* வேப்பங்கொழுந்து பொடியுடன், அதிமதுர பொடியை சேர்த்து, நீர் விட்டுக் கலந்து உலர வைக்கவும். உலர்ந்ததும் உருண்டைகளாக உருட்டி, தினமும், மூன்று வேளை உட்கொள்ளவும். இப்படி செய்துவர, அம்மை நோய் விரைவில் உடலை விட்டு அகலும்

* வேப்ப இலையை அரைத்து புண் மற்றும் கட்டி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், புண் விரைவில் ஆறும்

* வேப்பம் பூவை ரசம் வைத்து, உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்

* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், முகப்பரு மறைந்து, முகம் பொலிவு பெறும்

* வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், உடம்பில் உள்ள கொப்புளங்கள் பொரிந்து விடும்

* வேப்ப இலையை அரைத்து சாறெடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பித்தம் தணியும்

* தினமும் காலை, வெறும் வயிற்றில், சிறிது வேப்பங்கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது, நல்ல தீர்வை கொடுக்கும்

* வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பித்த மயக்கம் தெளியும்

* வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, கால் வெடிப்பு, நகச்சுற்று போன்றவற்றிற்கு பற்றுப் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்

* வேப்ப இலையை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டு வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்

* சொரியாசிஸ், புழுவெட்டு நோய் மற்றும் சிரங்கு போன்ற நோய்களை போக்கும் வல்லமை வேப்பிலைக்கு உண்டு

* வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால், சரும நோய்கள் அனைத்தும் தீரும்

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்

விவசாயத்தில் வேப்பிலை மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.






      Dinamalar
      Follow us