
* மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் தான், தீபாவளி தமிழகத்தில் புகுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அதன்பின் தான், தென் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
* விஷ்ணு புராணத்தில், தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி, மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என, சொல்லப் பட்டிருக்கிறது. மகாலட்சுமியை மணந்த நாளே தீபாவளி திருநாள் என்றும் கூறப்படுகிறது.
* அசோக சக்ரவர்த்தி, புத்த மதத்திற்கு மாறிய நாளே, புத்த மதத்தினரால் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளியை, 'அசோக் விஜயதசமி' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
*குஜராத்தில் தீபாவளி அன்று, வெடி வெடிப்பதை பிரதானமாகக் கொள்வதில்லை. வெவ்வேறு அளவுகளில் பட்டங்களைப் பறக்கவிட்டு குதுாகலம் கொள்கின்றனர். குஜராத்தினர் மற்றும் மார்வாரிகளுக்கும் தீபாவளி அன்று, புதுக் கணக்கு எழுதும் சம்பிரதாயம் இருந்து வருகிறது.