
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கறிஞர் ஒருவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். அப்படி என்ன சாதனை படைத்தார்?
தன், 97வது வயதிலும், நீதிமன்றங்களில் வழக்காடி வருகிறார், பி.சுப்ரமண்ய மேனன், என்ற அந்த வழக்கறிஞர்.
கேரள மாநிலம், பாலக்காடு, புதுாரை சேர்ந்த இவர், இன்றும் வாதாடி, தன் கட்சிக்காரர்களுக்கு, நீதி கிடைக்க செய்கிறார்.
பொதுவாக, 50 வயதை கடந்தால், வயசாச்சே என,அலுத்துக் கொள்பவர்களிடையே, இந்த வயதிலும் படு சுறுசுறுப்பாக செயல்படும் இவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததை பலரும் பாராட்டியுள்ளனர். இப்போதும், இவர் வீட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய வில்லை.
— ஜோல்னாபையன்