sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - வீரம்!

/

கவிதைச்சோலை - வீரம்!

கவிதைச்சோலை - வீரம்!

கவிதைச்சோலை - வீரம்!


PUBLISHED ON : பிப் 04, 2024

Google News

PUBLISHED ON : பிப் 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லிக்கட்டு காளையை

அடக்குவது மட்டுமல்ல...

அடங்க மறுக்கும்

மனதை அடக்குவதும்

வீரம் தான்!

இளவட்டக் கல்லை

தோளுக்கு மேல் சுழற்றி

வீசுவது மட்டுமல்ல...

இலகுவான வார்த்தைகளை

இதமாக பேசுவதும்

வீரம் தான்!

குத்துச் சண்டையில்

எதிராளியை குத்து விட்டு

வீழ்த்துவது மட்டுமல்ல...

குடும்பச் சண்டையில்

பங்காளியை மன்னித்து

வாழ்த்துவதும்

ஒரு வகை வீரம் தான்!

பிரச்னைகள்

பாம்பைப் போல்

படமெடுத்து ஆடும்போது

பொறுமை எனும்

மகுடியால் அடக்குவதும்

வீரம் தான்!

கோபம்

எரிமலை போல்

குமுறும்போது

வெடித்துச் சிதறாமல்

அமைதி காப்பதும்

வீரம் தான்!

ஆத்திரம்

ஆற்று வெள்ளம் போல்

அடங்காமல் வரும்போது

அணை கட்டி தடுப்பதும்

வீரம் தான்!

லஞ்சம் வாங்க

மன விரல்கள் நீளும்போது

கையை தடுத்து

கையூட்டு வாங்காமல்

கடமையை செய்வதும்

வீரம் தான்!

சிகரத்தில் ஏறி

கொடி நாட்டுவது மட்டுமல்ல

வீட்டுக்கொரு

மரம் நட்டு வளர்ப்பதும்

மனிதனுக்கு

வீரம் தான்!

தன் பலத்தை

வெளிச்சம் போட்டு

காட்டுவதல்ல...

மனித நேயமுள்ள

மனிதனாய் - தன்னை

காத்துக் கொள்வதும்

வீரம் தான்!

— என். ஆசைத்தம்பி, சென்னை.






      Dinamalar
      Follow us