தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாம மகிமை!

நாம மகிமை!

நாம மகிமை!


PUBLISHED ON : பிப் 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகா பண்டிதர்; சிறந்த பக்தர்; நாம மகிமையை விளக்கும், 'ஸ்ரீ பகவான் நாம விலாசம்' எனும் நுாலை எழுதியவர்-, தாமோதரன் நம்பூதிரி. குருவாயூரப்பனை தியானித்து, நாம ஜபம் செய்து கொண்டிருப்பதே வாழ்வு என, இருந்தவர்.

இவருடைய நண்பர், நீலகண்ட நம்பூதிரி என்பவர், வேதம், காவியம், சாஸ்திரம் என, அனைத்திலும் கரை கண்டவர். நாம மகிமையை விரிவுரை செய்வதும், நாம உபதேசம் செய்வதுமே வாழ்வு என, கொண்டவர்.

நல்லவர்களுக்குத் தானே, துயரம் அதிகமாக வருகிறது.

தாமோதரனுக்கு, 'பிரமேகம்' எனும் கொடிய நோய் வந்தது. மருத்துவர்கள் பலரும் கூடி மருத்துவம் பார்த்தும், பலனில்லை. முதுகுத் தண்டின் நடுவிலிருந்த ஒரு பரு உடைந்து, ரத்தமும், சீழும் வெளியேறத் துவங்கியது.

நாளாக நாளாக, ஒரு கை உள்ளே போகும் அளவிற்கு பெரும் துவாரம் உண்டாகி விட்டது. குருநாதருக்கு பணிவிடை செய்து, காயத்தை அவ்வப்போது துாய்மை செய்தனர், சீடர்கள். நண்பரான நீலகண்டரின் தலைமையில், சிகிச்சை முழுவதும் நடந்து வந்தது.

ஆனால், தாமோதரனோ, குருவாயூரப்பன் திருவடிகளைத் தியானித்து, நாராயண நாமம் சொல்வதிலேயே கருத்தாய் இருந்து, உடல் வலியை உதறித் தள்ளினார்.

ஒருநாள், தன் நண்பரிடம், 'நோயின் பாதிப்பு கடுமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், இந்த உடம்பு, என்றாவது ஒருநாள் போகப் போவது உறுதி. இறப்பதைப் பற்றி வருத்தமும் இல்லை...

'ஆனால், இந்த உடம்பு இல்லாவிட்டால், பகவான் நாமத்தை ஜபித்து, ஆனந்தப்பட முடியாது; குருவாயூரப்பனின் ஒளி மயமான திருவடிகளை தரிசிக்கவும் முடியாது என்பதை நினைக்கும்போது தான், வருத்தமாக இருக்கிறது. இத்துயர் தீர ஒரே மருந்து, குருவாயூரப்பனின் நாம ஜபம் தான்; வேறு வழியே இல்லை...' என்றார், தாமோதரன்.

அதை அப்படியே ஏற்ற, நீலகண்டர், அங்கிருந்து நேரே, மதியவேளையில், குருவாயூரப்பனுக்கு நடைபெறும் வழிபாட்டிற்கு சென்றார்.

'குருவாயூரப்பா... தாங்கள் தான், தாமோதர நம்பூதிரியின் நோயைத் தீர்க்க வேண்டும்; அதன் மூலம், தங்கள் நாம மகிமை, உலகிற்கு அனுபவமாகும்படி அருள் செய்ய வேண்டும்...' என, உள்ளம் உருகி, பிரார்த்தித்தார்.

பிரார்த்தனை முடிந்து நீலகண்டர், பக்தர்களுடன் நண்பரின் இருப்பிடத்திற்கு சென்றார். நாம ஜபத்தைத் துவங்கினார். தினமும், குருவாயூரப்பன் சன்னிதியில் மதிய வழிபாடு முடிந்து, பக்தர்கள் பலரும், நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டனர்.

பிறகென்ன, குருவாயூரப்பன் அருளால், தாமோதரனின் நோய் படிப்படியாக குறையத் துவங்கியது; ஆறு மாதத்திற்குள் முழுமையாக நீங்கியது. 75- ஆண்டுகளுக்கு முன், குருவாயூரில் நடந்த நிகழ்வு இது.

காலையும் - மாலையும், 10 முறையாவது, பகவானின் நாமங்களை சொல்வோம்; பாடாய்ப் படுத்தும் நோய்களிலிருந்து விடுபடுவோம்!

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us