PUBLISHED ON : ஏப் 05, 2020

கோடை வந்தாலே, பள்ளிகளுக்கு விடுமுறை; குழந்தைகளுடன் சுற்றுலா செல்வர், பெற்றோர். இந்தியாவில், பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் மிக அதிகமாக செல்லும் இடங்கள் எவை என, ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவை:
டில்லி, இந்தியா கேட்; ஆக்ரா, தாஜ்மஹால்; ஜெய்ப்பூர், ஜெய் மஹால்; காஷ்மீர், தால் ஏரியில் படகு சவாரி; கோவா, கடற்கரை; கன்னியாகுமரி, கடற்கரை; கேரளாவில், மூணாறு மற்றும் படகு இல்லங்களில் சவாரி; மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்; உத்தரகண்ட் மாநிலம், முசோரி மற்றும் சிக்கிம்.
மே மாதமும், அதேசமயம், அங்கு பனி பொழிவும், ஐஸ் கட்டிகளை எடுத்து விளையாட என்றால், ஜம்மு - காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் போகலாம். இங்கு, மே கடைசி வாரம் முதல், ஜூன் முதல் வாரம் வரை, பல இடங்களில், நீங்கள் விரும்பும் காட்சிகளை காணலாம்.
ஜம்மு - காஷ்மீரில், குல்மார்க், சோனார் மார்க் மற்றும் வட சிக்கிம் ஆகியவை, இவற்றில் முதன்மையானவை!
