
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேங்காய் சட்னி அரைக்கும்போது, பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும்.
* தக்காளி அல்லது வெங்காயம் சட்னி செய்யும்போது, சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால், மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்
* துவையலில் மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்
* கொத்தமல்லி, புதினா துவையல் செய்யும் போது, தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால், சுவையாக இருக்கும்.