/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்
/
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்
PUBLISHED ON : பிப் 14, 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) தமிழகத்திலுள்ள அரசு காலியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருகிறது. தற்சமயம் இந்த அமைப்பின் சார்பாக ஹாஸ்டல் சூப்பரிண்டன்ட் கம் பிசிக்கல் டிரைனிங் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.07.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 08.02.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன் பிசிக்கல் எஜூகேசன் முடித்திருக்க வேண்டும். அல்லது பிசிக்கல் எஜூகேஷன் பிரிவில் டீச்சர் டிரைனிங் முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஓ.எம்.ஆர்., அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகைத் தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு என்ற இரண்டு நிலைகளில் தேர்ச்சி இருக்கும். அப்ஜெக்டிவ் வகைத் தேர்வில் பிசிக்கல் எஜூகேஷன் பிரிவில் 300 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாளில் பொது அறிவு பிரிவில் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை மற்றும் மதுரையில் இத்தேர்வுகள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 09.03.2017
விபரங்களுக்கு: www.tnpsc.gov.in

