/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நர்சிங் முடித்தவருக்கு இ.எஸ்.ஐ.,யில் வாய்ப்பு
/
நர்சிங் முடித்தவருக்கு இ.எஸ்.ஐ.,யில் வாய்ப்பு
PUBLISHED ON : மார் 12, 2024

மத்திய அரசின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நர்சிங் ஆபிசர் பிரிவில் 1930 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., நர்சிங் முடித்துவிட்டு, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது GNM டிப்ளமோ முடித்த பின் நர்சிங் கவுன்சிலில் பதிவு, குறைந்தது 50 படுக்கை மருத்துவமனையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27.3.2024 அடிப்படையில் 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலுார், புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.3.2024 மாலை 6:00 மணி
விவரங்களுக்கு: upsc.gov.in