
மானாவாரி (நவம்பர்) கே 1, கோ 2. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்துமுறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின் மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.
தொழு உரமிடுதல்: நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன் தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்.
விதையும் விதைப்பும்: விதை அளவு எக்டேருக்கு 10 கிலோ.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பன்டசிம் மருந்தைக் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர் அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்.
விதைக்கும் முறை: விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை மூலமாக வரிசையில் நடவு செய்யலாம்.
இடைவெளி: நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது 15 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும். விதைத்த 15ம் நாள் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு செடிகளை களைத்துவிட வேண்டும்.
உரமிடுதல்: பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி/எக்டர் அடியுரமாக இடவேண்டும். களைக்கட்டுப்பாடு விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை களைளை, களைக்கொத்தி மூலமாகவோ கைக் களையாகவோ எடுக்க வேண்டும்.
அறுவடை: முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச்செடியும் பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப் பட்ட பயிரினை களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்தியபின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.
எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656.
மொபைல்: 93607 48542.

