sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வெந்தயம் சாகுபடி

/

வெந்தயம் சாகுபடி

வெந்தயம் சாகுபடி

வெந்தயம் சாகுபடி


PUBLISHED ON : ஜூன் 13, 2012

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரகங்கள்: கோ.1, கோ.2 மற்றும் பூசா எரிலிபன்சிங்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணற்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.

பருவம்: ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர்

விதையும் விதைப்பும்: விதையளவு: எக்டருக்கு 12 கிலோ விதைகள்

விதைப்பு: நிலத்தை நன்கு உழுதபின் 3.5 து 1 அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து விதை களை விதைக்க வேண்டும். விதைக்கும் முன்னர் ஒரு எக்டருக்குதேவையான விதையுடன் 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: அடியுரம்: எக்டருக்கு 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். மேலுரம்: விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரத்தை இடவேண்டும்.

நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு மூன்றாம் நாளும் அதனைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி: களை எடுத்தல்: களைகள் முளைக்கும் முன் எக்டருக்கு 700 மில்லி பெண்டிமித்திலின் களைக்கொல்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கல்நதுதெளிக்க வேண்டும். பின் இரண்டு அல்லது மூன்று முறை களை எடுக்க வேண்டும். பின் 3 மாதம் கழித்து மண் அணைக்க வேண்டும்.

பின்செய்நேர்த்தி: விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு பயிர் களைதல் வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: வேரழுகல்: நோய் தோன்றும்போது 0.5 கிராம் கார்பன்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்ற வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். எக்டருக்கு 50 கிலோ புண்ணாக்கை நோய் தோன்றும்போது இடவேண்டும்.

அறுவடை: விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும்.

மகசூல்: எக்டருக்கு பசுங்கீரை-4000-5000 கிலோ, விதைகள்: 500-700 கிலோ.

-அகமது கபீர்,
வேளாண்மை ஆலோசகர்
அக்ரி கிளினிக், தாராபுரம், 89037 57427.

பயிர்:

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் செடி ஒன்றுக்கு):

வெந்தயம் - அடியுரம்: தழை - 30, மணி - 25, சாம்பல் - 40

வெந்தயம் - மேலுரம்: தழை - 20, மணி - 0, சாம்பல் - 0

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு (கிராம் செடி ஒன்றுக்கு):

வெந்தயம் - அடியுரம்: 10:26:26 - 97, யூரியா - 45, பொட்டாசியம் - 25

வெந்தயம் - மேலுரம்: 10:26:26 - 0, யூரியா - 44, பொட்டாசியம் - 0






      Dinamalar
      Follow us