sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த...

/

பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த...

பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த...

பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த...


PUBLISHED ON : ஜூன் 13, 2012

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும். தண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக காணப் படும். இந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் காணப்படும். பின்னர் அப்பகுதி கருப்பு நிறமாக மாறி, மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியுடன் செடி ஒடிந்துவிடும். செடி காய்க்கும் தருணத்தில் வேரழுகல் நோய் அதிகமாகக் காணப்படும். வேரழுகல் நோய் தாக்கிய செடிகள் திடீரென்று வாடி வதங்கிவிடும். இந்த செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் பக்கவாட்டு வேர்கள் சிறுத்தும் வேர்ப்பகுதி அழுகியும் காணப்படும். தாக்கப்பட்ட செடிகளின் பட்டை நார் நாராகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிப் பார்த்தால் கருப்பு நிற பூசண வளர்ச்சியைக் காணமுடியும்.

சாதகமான சூழ்நிலைகள்: வறண்ட வானிலைக்குப் பின் கனத்த மழை பெய்தாலும் மண்ணின் வெப்பநிலை 35 முதல் 39 டிகிரி செ. இருந்தாலும் ஈரப்பதம் 15 முதல் 20% இருந்தாலும் பருத்திக்கு முன் காய்கறிகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைப்

பயிர்கள் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

நோய் பரவும் விதம்: நோய்க்காரணியானது மண் மூலம் முதன்மையாகப் பரவுகிறது. இரண்டாவதாக பாசன நீர், காற்று ஆகியவற்றின்மூலம் பரவுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்: பருத்தி விதைக்கு ஒரு கிலோவுக்கு 2 கிராம் பவிஸ்டின் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிவிட்டு, அதற்குப் பின் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் தாக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேரில் ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம். விதைக்கும் காலம் அதிக வெயில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஊடுபயிராக சோளம் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும்.

எஸ்.ஜெயராஜன் நெல்சன், பேராசிரியர் மற்றும் தலைவர்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.






      Dinamalar
      Follow us