/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நீலப்பச்சை அவரைக்காய் வளர்ப்பில் அதிக வருவாயை ஈட்ட முடியும்
/
நீலப்பச்சை அவரைக்காய் வளர்ப்பில் அதிக வருவாயை ஈட்ட முடியும்
நீலப்பச்சை அவரைக்காய் வளர்ப்பில் அதிக வருவாயை ஈட்ட முடியும்
நீலப்பச்சை அவரைக்காய் வளர்ப்பில் அதிக வருவாயை ஈட்ட முடியும்
PUBLISHED ON : ஜன 08, 2025

நீலப்பச்சை நிற அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண்பூமியில், பலவித அவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்துவருகிறேன். இதில், நீலபச்சை நிற அவரைக்காய் நன்றாக வளர்கிறது. குறிப்பாக, மற்ற ரகங்களில், ஒரு காம்பில் நான்கு அவரைக்காய்கள் வரை காய்க்கும்.
ஆனால், இந்த நீலப்பச்சை நிற அவரைக்காயில், ஒரு காம்பிற்கு இரு அவரைக்காய் மட்டுமே காய்க்கும். அதிக சத்து நிறைந்து இருப்பதால், பிற அவரைக்காயை காட்டிலும் மகத்துவம்வாய்ந்தது. நீலப்பச்சை நிற அவரைக்காய், காய் முழுதும்பச்சை நிறமாகவும், காய்கள் ஓரத்தில் நீல நிறத்தில் வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் கூடுதலாக விலை கொடுத்து மக்கள் வாங்குகின்றனர். அதேபோல், அதிக மகசூல் கிடைக்கிறது. கூடுதல் வருவாயும் ஈட்ட முடிகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.குகன்,
94444 74428