sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

அதிக மகசூலுக்கு குஜராத் வேர்க்கடலை

/

அதிக மகசூலுக்கு குஜராத் வேர்க்கடலை

அதிக மகசூலுக்கு குஜராத் வேர்க்கடலை

அதிக மகசூலுக்கு குஜராத் வேர்க்கடலை


PUBLISHED ON : ஆக 21, 2024

Google News

PUBLISHED ON : ஆக 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'கிர்நார்- - 4' ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:

நான் பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன்.

வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.

அந்த வரிசையில்,குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'கிர்நார்- - 4' ரக வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளேன். இதை, 120 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்த ரகத்தில், நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிர்வாகத்தை முறையாக கையாண்டால், 1 ஏக்கருக்கு, 30 மூட்டை வரையில் மகசூல் பெறலாம்.

இது, பிற ரக வேர்க் கடலையைக் காட்டிலும், 10 மூட்டைகள் கூடுதல் மகசூல் தரும்.

இந்த ரகம் எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றது எனக் கூறலாம். குறிப்பாக, கார்த்திகை மற்றும் சித்திரை ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்ய உகந்த ரகம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி.குகன்,

94444 74428







      Dinamalar
      Follow us