sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

"கோகோ' சாகுபடியில் ஆர்வம்

/

"கோகோ' சாகுபடியில் ஆர்வம்

"கோகோ' சாகுபடியில் ஆர்வம்

"கோகோ' சாகுபடியில் ஆர்வம்


PUBLISHED ON : ஜூன் 12, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே எஸ்.புளியங்குளத்தில், தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்வதில், விவசாயி ஆர்வம் காட்டுகிறார். புளியங்குளம் விஜயன். இவரது குடும்பத்திற்கு சொந்தமாக அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. கிணற்றுப்பாசனம் வேறு. கரிசல், வண்டல் கலந்த மண்வளம். தென்னந் தோப்பில் ஏற்கனவே ஒரு பகுதியில் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ளார். ஆடுகள், மாடுகள், கோழிகள் வளர்க்கிறார்.

விஜயன் கூறியதாவது: 'கோகோ' பயிரிட, திருப்பரங்குன்றம் ஒன்றிய தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். அவர்கள், 'தண்ணீர் வசதி, இதமான சூழ்நிலை தேவை. மூன்றாண்டுகளில் பலன்தரும். ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்,' என்றனர். மூன்றாண்டுகளுக்கு முன் இலவசமாக 2000 'கோகோ' கன்றுகள் மற்றும் உரம் வழங்கினர். தென்னையில் 8 ஏக்கரில் ஊடுபயிராக 'கோகோ' நடவு செய்துள்ளோம்.

எங்களைப்போல் 10 விவசாயிகளுக்கு கன்றுகள், உரங்களை மானியமாக வழங்கினர். 'கோகோ'விற்கு அதிக தண்ணீர் வசதி இருக்க வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால், கிணறில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் மழை பெய்யாவிடில், சிரமம்தான்.

தற்போது பலன்தரத்துவங்கியுள்ளது. சாக்லைட், கேக்குகளில் கிரீம் தயாரிக்க 'கோகோ' பயன்படுத்துகின்றனர். 'கேட்பரீஸ்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஒரு கிலோ 'கோகோ' விதைகளை 140 ரூபாய்க்கு வாங்குகின்றனர், என்றார். விபரங்களுக்கு 97897-07068 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us