sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வேலிமசால்

/

வேலிமசால்

வேலிமசால்

வேலிமசால்


PUBLISHED ON : ஜூலை 13, 2011

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான ''வேலிமசால்'' பயிரிடலாம். கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். செடியில் பச்சையம் சத்து அதிகளவு உள்ளதால் கால்நடைகளுக்கு மட்டுமல்ல, தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.

இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும். பார் பிடித்தல் 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார் களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மண் பரிசோதனையின்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 10:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும்.

விதை அளவு - தீவனத்திற்கு எக்டருக்கு 10 கிலோ.

அமில நேர்த்தி: விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை 1000 செ.கி.க்கு கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து (800 செ.கி) விதைகளை 3-4 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அடுத்து சூடான நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் வைக்கலாம். விதைநேர்த்தி செய்தபின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக்கஞ்சியில் கலந்து காயவைத்தபின் விதைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை: பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலாண்மை செய்திட வேண்டும். வளர்ச்சியடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சூழ்நிலையையும்கூட தாக்குப்பிடித்து விடும். இருந்த போதிலும் விரைவான இளஞ்செடிகளின் வளர்ச்சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அறுவடை: நட்டபின் 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். தண்டின் விட்டம் 3 செ.மீ. அடைந்தவுடன் (அல்லது) ஒருமுறை விதை உற்பத்திக்கு விட்டவுடன் முதல் அறுவடை செய்யலாம். அதற்கு பிறகு 40-80 நாட்களில் வளர்ச்சி மற்றும் பருவத்திற்கேற்ப அறுவடை செய்யலாம். வறட்சி அதிகமுள்ள பகுதிகளில் மரத்தை இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். மரத்தை தரைமட்டத்திலிருந்து 90-100 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பூட்டு மற்றும் எரிபொருளாக பயன்படுத்த மரத்தை 2.5 அல்லது 5 வருடத்திற்கு வெட்டாமல் பக்கக்கிளைகளை அகற்றிவிட வேண்டும். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.

ஆர்.ஜி.ரீஹானா, தாராபுரம், 89037 57427.






      Dinamalar
      Follow us