sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கொய்யாவில் பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்

/

கொய்யாவில் பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்

கொய்யாவில் பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்

கொய்யாவில் பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்


PUBLISHED ON : பிப் 26, 2025

Google News

PUBLISHED ON : பிப் 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொய்யா சாகுபடியில், பூஞ்சாண நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:

கொய்யா சாகுபடியில்,ஆந்த்ராக்னோஸ் என அழைக்கப்படும்பூஞ்சாண நோய் தாக்கம் ஏற்படும். நோய் துவக்கத்தில், இலைகளில் மிகச் சிறிய புள்ளிகள் ஏற்படும்.

ஒரு இலை, மற்றொரு இலை மீது உரசி, மரக்கிளை மற்றும் காய்களில் பரவும். கொய்யாகாய்களில் சிறிய புள்ளி களாக விழுந்து பழமாகும்போது புள்ளிகள்விரிவடைந்து, கொய்யா பழங்கள் முழுதும் பாதித்து, சுவை மாறுபடும். கொய்யா அறுவடைக்கு பின், வருவாய் இழப்பு ஏற்படும்.

இதை கட்டுப்படுத்த போர்டோ கலவை,காப்பர் ஆக்சிகுளோரைடு ஆகிய பூஞ்சாணக்கொல்லி மருந்துகளை, மழைக்காலம் துவங்குவதற்கு முன் தெளிக்க வேண்டும்.

மேலும், நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் கொய்யா ரகங்களை வளர்க்கவேண்டும். ஊட்டச்சத்துடன் கூடிய நீர் மேலாண்மையை கையாள வேண்டும். இதுதவிர, செடிகளை காவாத்து செய்யவேண்டும்.

இது போல செய்வதன் வாயிலாக, கொய்யா சாகுபடியில் பூஞ்சாண நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற முடியும்.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,

97910 15355







      Dinamalar
      Follow us