sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நம்மூர் மண்ணிலும் மெக்சிகன் பப்பாளி

/

நம்மூர் மண்ணிலும் மெக்சிகன் பப்பாளி

நம்மூர் மண்ணிலும் மெக்சிகன் பப்பாளி

நம்மூர் மண்ணிலும் மெக்சிகன் பப்பாளி


PUBLISHED ON : ஜன 29, 2025

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்சிகன் பப்பாளி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.

அந்த வரிசையில், மெக்சிகன் பப்பாளி ரக மரத்தை சாகுபடி செய்துள்ளேன். இது மாடி தோட்டம் மற்றும் விளைநிலங்களில் எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு மிகவும்குட்டையாக இருக்கும்.

நம்ம ஊர் மணல் கலந்த களிமண், சவுடு மண் உள்ளிட்ட பலவித மண்ணுக்கு ஊட்டத்துடன் வளர்கிறது. குறிப்பாக, மெக்சிகன் பப்பாளி ஓராண்டில் மகசூல் கொடுக்கும் தன்மை உடையது. தொடர்ந்து, இரு ஆண்டுகளுக்கு மகசூல் தரும்.

இந்த ரக பப்பாளியின் காய் பச்சை நிறத்திலும், பழங்களாகும் போது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். நகரங்களை ஒட்டியிருக்கும் விவசாயிகள், இதுபோன்ற ரக பப்பாளி சாகுபடி செய்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். இந்த பழங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: கே.சசிகலா, 72005 14168






      Dinamalar
      Follow us