sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மலை மண்ணில் சாகுபடியாகும் தங்க நிற 'நாம் டோக் மாயி' பழம்

/

மலை மண்ணில் சாகுபடியாகும் தங்க நிற 'நாம் டோக் மாயி' பழம்

மலை மண்ணில் சாகுபடியாகும் தங்க நிற 'நாம் டோக் மாயி' பழம்

மலை மண்ணில் சாகுபடியாகும் தங்க நிற 'நாம் டோக் மாயி' பழம்


PUBLISHED ON : ஜன 29, 2025

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்க நிற 'நாம் டோக் மாயி' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:

மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.

அந்த வரிசையில், தாய்லாந்து நாட்டில் விளையும், நாம் டோக் மாயி என, அழைக்கப்படும் தங்க நிற மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன்.

இது, மாடி தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம். பிற ரக மாம்பழங்களை போல இல்லாமல், இரு சீசன்களில் மகசூல் தரும்.

குறிப்பாக, தங்க நிற நாம் டோக் மாயி மாம்பழத்தின் காய்கள் நீளமாகவும், பழம் தங்க நிறத்திலும் இருக்கும்.

ஒரு மாம்பழம், 300 கிராம் வரையில் எடை இருக்கும். இது, பிற மாம்பழங்களை காட்டிலும், அதிக சுவையுடன் இருப்பதால், சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். பழத்தை ருசித்த பின், கூடுதல் விலை கொடுத்து வாங்க மக்கள் தயக்கம் காட்டமாட்டர்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,

89402 22567.







      Dinamalar
      Follow us