sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

/

சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5


PUBLISHED ON : ஜூலை 20, 2011

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவீன தொழில்நுட்பம்

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை பாத்திகளின் மேல் தூவ வேண்டும். விதைகளை அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்துடன் ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். பின் மேட்டுப்பாத்திகளில் 3 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் கோடுகள் இழுத்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக்கோல் கொண்டு மூடி, பின் பூ வாளி கொண்டு காலை, மாலை இரு வேளையும் நீரைப்பாய்ச்சி பராமரிக்க வேண்டும். விதைத்த 8-10 நாட்களில் விதை முளைத்தவுடன் புல் போர்வையை நீக்கி 40-45 நாட்கள் வரை பராமரித்து, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் (ரோகார்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு: புழுதிபட உழுது, ஒரு ஏக்கருக்கு 2 மூடை டி.ஏ.பி., 10 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவில் களை பறித்து, 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்டவுடனும் பின் 5 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

பெண்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி என்ற அளவில் நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தெளிக்க வேண்டும். ஒரு மாத இடைவெளியில் பின்னர் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.

மேலுரமாக ஒரு மூடை யூரியா, 2 மூடை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவுசெய்த 30வது நாளில் களை எடுத்தபின் இடவேண்டும். 60வது நாள் மீண்டும் ஒரு முறை களை எடுத்து, ஒரு மூடை யூரியா, 2 மூடை பொட்டாஷ் இடவேண்டும். வெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடவிலிருந்து அறுவடை வரை 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

அறுவடை: அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பயிரின் 75 சதவீதம் இலைகள் வாடியவுடன் வெங்காயத்தை தோண்டி எடுக்கலாம். பயிர் நடவு செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு 7 டன் வெங்காயம் விளைச்சல் எடுத்துள்ளார் அனுபவ விவசாயி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா. (தகவல்: பெ.ச.கவிதா, ம.அ.வெண்ணிலா, செ.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம். 90470 65335)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us