sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மல்லிகை, வெண்டை பயிர்களில் செஞ்சிலந்தி தாக்குதல்

/

மல்லிகை, வெண்டை பயிர்களில் செஞ்சிலந்தி தாக்குதல்

மல்லிகை, வெண்டை பயிர்களில் செஞ்சிலந்தி தாக்குதல்

மல்லிகை, வெண்டை பயிர்களில் செஞ்சிலந்தி தாக்குதல்


PUBLISHED ON : ஜன 09, 2013

Google News

PUBLISHED ON : ஜன 09, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வறண்ட கோடையில் உங்கள் மல்லிகை, வெண்டைப் பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை கவனித்திருப்பீர்கள். வெண்டையில் காய்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போய்விடும். இந்நிறமாற்றம் செஞ்சிலந்தி தாக்குதலால் ஏற்படுகின்றது. செஞ்சிலந்தி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

செஞ்சிலந்தி தாக்குதல் அறிகுறிகள்:



பாதிப்பு முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி இளம் இலைகளுக்கு பரவும். இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட மல்லிகை இலைகள் மற்றும் வெண்டை காய்களின் இலைகள் ஆகியவற்றை உற்று நோக்கினால் மெல்லிய நூலாம்படையும் அதனுள் சிவப்புநிற சிறிய பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காணமுடியும்.

உருப்பெருக்கி கொண்டு பார்த்தால் அப்பூச்சிகள் எட்டுக்கால்கள் கொண்டனவாக இருப்பதைக் காண இயலும். இப்பூச்சிகள் செவ்வுண்ணி என்றும் அழைக்கப்படும். தாக்குதல் தீவிரப்பட்டால் இலைகள் முற்றிலும் வெளுத்து காய்ந்து கீழே உதிர்ந்துவிடும். வறண்ட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தி தாக்குதல் விரைந்து பரவும். நன்கு மழை பெய்தால் தாக்குதல் குறையும்.

கட்டுப்படுத்த:



மல்லிகை, வெண்டைப் பயிர்களில் செஞ்சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் வீதம் நனையும் கந்தகம் மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்துக் கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படி தெளிக்க வேண்டும்.

குறிப்பு:



மருந்துக் கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், இன்ட்ரான் - வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

எஸ்.ஜெயராஜன் நெல்சன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்

பருத்தி ஆராய்ச்சி நிலையம்

ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.






      Dinamalar
      Follow us