PUBLISHED ON : ஆக 07, 2019
தரிசு நிலத்தில், மூங்கில் சாகுபடி செய்வது குறித்து, உத்திரமேரூர் அடுத்த, கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, 'எழில்சோலை' மரம், மாசிலாமணி கூறியதாவது:
விவசாயிகளின் பச்சை தங்கம் என, மூங்கில் அழைக்கப்படுகிறது.
இதில் கல்மூங்கில், பொந்துமூங்கில், வல்காரிஸ், பால்கோவா ஆகிய ரகங்கள் உண்டு.
எந்த ரகத்தை பயிரிட்டாலும், கணிசமான வருவாய் ஈட்டலாம். வல்காரிஸ் ரகம் மூங்கிலில், கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 1 ஏக்கர் மூங்கில் சாகுபடி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
மூங்கில் சாகுபடிக்கு, உரம் மற்றும் நீர் நிர்வாகம் அதிகமாக தேவைப்படாது. இயற்கையாக கிடைக்கும் மழையில், அறுவடை செய்து விடலாம்.
பயிரிடப்படாத தரிசு நிலத்தில், சாகுபடி செய்தால், வருவாய்க்கு வழி வகுக்கும்.
மேலும், பண்ணை குட்டை அமைக்கும் போது, சுற்றிலும் மூங்கிலை நட்டால், மண் அரிப்பை தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 94436 38545

