sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்

/

மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்

மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்

மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்


PUBLISHED ON : பிப் 20, 2019

Google News

PUBLISHED ON : பிப் 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாவாரி பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், நீலக்கொழுக்கட்டைப்புல், மார்வல்புல் மற்றும் ஆஸ்திரேலியாபுல் குறிப்பிடத் தக்கவை. இவை 3 - 5 அறுவடைகளில் ஒரு எக்டேருக்கு 25 - 40 டன் வரை மகசூல் தரும். மானாவாரி பகுதியில் பயறு வகை தீவனப்பயிர்கள் வளர்க்கலாம். கால்நடைகளுக்கு புல் எப்படி அவசியமோ அதே போல் பயறு வகை தீவனங்களும் தேவை. குறிப்பாக குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, சிராப்ரோ, சென்ரோ மற்றும் கலப்போ முக்கியமானவை.

இவற்றை தனித்தனியே சாகுபடி செய்வதை விட தீவன மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில் கலந்து (மர ஊடுபயிர் உதவியுடன்) சாகுபடி செய்யலாம். சூடாடில் அகத்தி, முருங்கை, ஆச்சா, கிளாரிசிடியா, முள் இல்லா மூங்கில் அரசு, வாகை, துாங்கிமூஞ்சி மரம், வேம்பு, மலை வேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை இலுப்பை, வேங்கைநாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி முதலியவை நமது பகுதிக்கேற்ற தீவன மரங்கள். ஆண்டு முழுவதும் தீவன மரங்களின் இலைகளை கழித்து தழை தீவனத்தில் மர இலைகளை 30 சதவீதம் தரலாம்.

தொடர்புக்கு 98420 07125.

- டாக்டர் பா. இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர் தேனி.






      Dinamalar
      Follow us