sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மக்காச்சோள தட்டை மடக்கி உழுதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்

/

மக்காச்சோள தட்டை மடக்கி உழுதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்

மக்காச்சோள தட்டை மடக்கி உழுதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்

மக்காச்சோள தட்டை மடக்கி உழுதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்


PUBLISHED ON : டிச 11, 2024

Google News

PUBLISHED ON : டிச 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மக்காச்சோள தட்டை விற்பதை விட, மடக்கி உழவு செய்தால் மண் வளம் பாதுகாக்கப்படும்; உரச்செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கும்,' என, ஆராய்ச்சி மக்காச்சோள நிலைய தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண் பல்கலையின் கீழ், திண் டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா வாகரையில், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் செயல்படு கிறது. இம்மையத்தின் தலைவர் செல்வகுமார், தாவரக் கழிவை மண் வளத்திற்காக பயன் படுத்துவது குறித்து கூறியதாவது:

எந்த இருந்தாலும், பயிராக மண் பரிசோதனை செய்து, உரமிட அதற்கேற்ப வேண்டும். பொதுவாக விவசாயிகள், மக்காச் சோள பயிருக்கு போதிய உரமிடுவதில்லை. மழை நன்றாக பெய்தாலே பயிர் செழிப் பாக வளரும். 'பொட் டாஷ்' உரமிட்டால் தான், மக்காச் சோளத்தில் விதை பிடிக்கும் திறன் அதிகரிக்கும்.

விலை நன்றாக கிடைப் பதால், சில விவசாயிகள் தொடர்ந்து மக்காச் சோளம் பயிரிடுவர். இதன் வேர்கள் தானாக கொள்ளும். சத்துக்களை உறிஞ்சிக் சில ஆண்டுகள் கழித்து மண்ணில் சத்து தீர்ந்தால், 'பயிர் வெள்ளை யாக, மஞ்சளாக இருக்கி றது; மகசூல் குறைகிறது' என்ற பிரச்னையோடு விவசாயிகள் வருவர்.

போதிய நுண்ணுாட்டச் சத்து கொடுக்காததால் இப்பிரச்னை வருகிறது. எனவே, மண்பரிசோதனை அதற்கேற்ப வேண்டும். செய்து, உரமிட மடக்கி உழணும் முந்தைய காலத்தில் மக்காச்சோள தட்டை மாடுகளுக்கு தீவனமாக அதிகம் பயன்படுத்த வில்லை. தற்போது அதிகம் பயன் படுத்துகின்றனர். சிலர், பதப்படுத்தப்பட்ட பசுந் தீவனம் உற்பத்திக்காக 80வது நாளில் தட்டோடு முழுதாக விடுகின்றனர். வெட்டி போதிய உரமிடாத நிலையில், தாவர கழிவு களையும் வெளியே எடுத்தால் மண் வளம்குறையும்.

சொந்தமாக மாடுகள் இருந்தால் மட்டும் தட்டை எடுத்துப் பயன் படுத்துங்கள். மாடு அதை தின்று, அதன் சாணம் மீண்டும் எருவாக நிலத்துக்கே கிடைக்கும். மாடுகள் விட்டால், இல்லா சோளத் தட்டை விற்காமல், நிலத்திலேயே மடக்கி உழவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மண்ணின் வளம் கூடும்.

தட்டை மட்கு வதில்லை என்ற பிரச் னைக்கும், தீர்வு உள்ளது. கோவை பல்கலையின் வேளாண் சுற்றுச் சூழல் அறிவியல் துறை, தட்டை வேகமாக மட்கச் செய்யும் ஊக்கியைக் கண்டறிந்துள்ளது. 'டிஸ்க்'அல்லது 'ரொட் டாவெட்டர்' பயன் படுத்தி, மக்காச்சோள தட்டை மடக்கி உழவு செய்து, மட்கச் செய்யும் ஊக்கியை போட்டால், விரைவில் மட்கி விடும். அடுத்து விரைவிலேயே பயிர் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us