/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் மண்ணில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி
/
நம்மூர் மண்ணில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி
PUBLISHED ON : டிச 27, 2023

ஸ்ட்ராபெர்ரி பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமானது மலை மண் சார்ந்த செம்மண் நிலமாகும். இந்த மண்ணில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், ஸ்ட்ரா பெர்ரி ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.
இது, படரும் தன்மை உடைய செடியாக உள்ளது. நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷண நிலைகளை தாங்கி வளர்கிறது. நம்மூர் மலை சார்ந்த செம்மண்ணுக்கு நன்றாக வளர்கிறது. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக, ஸ்ட்ராபெர்ரி பழத்தில், குறைந்த கலோரிகள் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. மேலும், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல், நினைவாற்றல் மேம்படுத்துதல் அகியவை இருப்பதால், சந்தையில் விற்பனைக்கு பஞ்சமும், வருவாய் குறைவும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: -கே.வெங்கடபதி, 93829 61000