/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்திலும் நாகர்கோவில் மட்டி ரக வாழை
/
மாடி தோட்டத்திலும் நாகர்கோவில் மட்டி ரக வாழை
PUBLISHED ON : பிப் 07, 2024

புவிசார் குறியீடு பெற்ற நாகர்கோவில் மட்டி ரக வாழை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும்முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் களி மண், செம்மண்ணுக்கு அனைத்து விதமான பழங்களையும் சாகுபடிசெய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், அனைத்து விதமான பழங்களையும் சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், புவிசார் குறியீடு பெற்ற நாகர்கோவில் மட்டி ரக வாழை விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இந்த மட்டி ரக பழம் மிகவும் சிறியதாகவும், அதிக சுவையுடன் இருக்கும்.
குறிப்பாக, புவிசார் குறியீடு பெற்ற நாகர்கோவில் மட்டி ரக வாழை மரம் குறைந்த உயரத்திலும், குறைந்த எண்ணிக்கை பழங்களும் மகசூல் கொடுக்கும்.
செரிமான கோளாறுகளை நீக்கும் தன்மை இந்த பழத்திற்கு இருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும், மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
94455 31372.