/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பில்லோடி நோயிலிருந்து எள் பயிரை காக்க அறிவுரை
/
பில்லோடி நோயிலிருந்து எள் பயிரை காக்க அறிவுரை
PUBLISHED ON : ஏப் 10, 2024

எள் பயிரில், பில்லோடி நோயை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
எள் பயிரில், பில்லோடி நோய் தாக்கம் ஏற்படும். பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால், இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதை, இலை தத்து பூச்சிகளின் மூலமாக பரப்புகிறது. குறிப்பாக, எள் பயிரின் இலைகள் சிறிதளவாகவும், நுணியில் கொத்துக் கொத்தாகவும், பூக்களின் பாகங்களும் சிறிய இலையாக மாறிவிடும்.
இதனால், மகசூல் பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க, நோய் தாக்கிய எள் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், தரமான விதைகளை தேர்வு செய்து, ஒரு கிலோ விதைக்கு, ஏழு மில்லி இமிடாகுளோபிரிட் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
வேப்ப எண்ணெய் மற்றும் அதன் விதை கரைசலை தெளிக்கலாம். நோய் அதிகமாக இருக்கும் போது, 40 மில்லி இமிடாகுளோபிரிட், 40 கிராம் தயோமீத்தாக்சோம் எடுத்து, தேவைக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். துவரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
நெல் ஆராய்ச்சி மையம், திரூர். 97910 15355.