sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மண்ணை வளமாக்கும் பயிர்கள்

/

மண்ணை வளமாக்கும் பயிர்கள்

மண்ணை வளமாக்கும் பயிர்கள்

மண்ணை வளமாக்கும் பயிர்கள்


PUBLISHED ON : மே 22, 2024

Google News

PUBLISHED ON : மே 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயிர்களால் நமக்கு விளைச்சல் என்பதை தாண்டி மண்ணுக்கு நன்மை என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. மண்ணை வளமாக்க பயிரிடும் பயிர்கள் மண்ணுக்கு பலவித நன்மைகளை தருகின்றன.

மண்ணை திருத்தும் பயிர்கள்

அருகம்புல், சூரியகாந்தி, சீமை அகத்தி, தக்கைப்பூண்டு போன்றவை மண்ணை திருத்தி அதன் வளர்ச்சியை பெருக்குகின்றன. அருகம்புல் மண்ணில் உள்ள உப்பை எடுத்துக்கொண்டு அதன் உவர்ப்பு தன்மையை குறைக்கும்.

சீமை அகத்தி, தக்கைப்பூண்டு களர் நிலத்திலும் நன்கு வளரும். சூரியகாந்தி மண்ணிலுள்ள சோடியத்தை (உப்பு - உவர் தன்மை) உறிஞ்சி எடுப்பதில் வல்லது.

வளப்படுத்தும் பயிர்கள்

கடற்கரை மண்ணிலும் சவுக்கு நன்கு வளரும். இதன் இலை சருகு எள் பயிருக்கு உரமாக பயன்படுகிறது.

சூபா புல், எருக்கு இலைகளில் போரான் சத்து அதிகம் உள்ளதால் பயிர்களை வளப்படுத்துகின்றன.

தழைச்சத்து தரும் பயிர்கள்

பயறு வகைகள், பசுந்தாள் உரப்பயிர்கள், நிலக்கடலை போன்றவை காற்றிலிருந்து தழைச்சத்தை உறிஞ்சி மண்ணில் நிலைநிறுத்தி வளரும். கம்பு, கேழ்வரகு, மக்காசோள பயிர்கள் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு தரும்.

சூரியகாந்தி, தட்டப்பயிறு, மக்காச்சோளம், சணப்பை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்றவை நுாற்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்குகின்றன.

மேலும் களைகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. விஷ கிருமிகளை தடுக்கும் மரங்களாக வேம்பு, புங்கம், பெருநெல்லி, மா, முருங்கை, செண்பகம் போன்றவை விளங்குகின்றன.






      Dinamalar
      Follow us