/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக மகசூலுக்கு கருப்பு நிற மக்காச்சோளம்
/
அதிக மகசூலுக்கு கருப்பு நிற மக்காச்சோளம்
PUBLISHED ON : மே 29, 2024

கருப்பு நிற மக்காச்சோளம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரமின்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் நிலத்தில், காய்கறி பயிர்களுடன் ஊடு பயிராக கருப்பு நிற மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன்.
நம்மூர் மண்ணுக்கு, மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் மக்காச்சோளம் நன்றாக வளர்கிறது. அந்த வரிசையில், கருப்பு நிற மக்காச்சோளமும், அருமையாக மகசூல் கொடுக்கிறது.
இதில், அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதால், சாகுபடிக்கு விரிவுபடுத்த விதையை உற்பத்திக்கு எடுத்து வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி. குகன், 94444 74428.