sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு மதிய உணவு

கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு மதிய உணவு

கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு மதிய உணவு


ADDED : மார் 10, 2025 09:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 09:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கோடை காலத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களில், பள்ளி மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் துவங்கவுள்ளன. தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படும்.

கோடை விடுமுறை நாட்களிலும், வறட்சி பாதித்த மாவட்டங்களில், மாணவ - மாணவியருக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்க கல்வித்துறை முன்வந்துள்ளது.

கோடை விடுமுறை காலத்தில், 31 மாவட்டங்களின், 223 வறட்சி பாதிப்பு தாலுகாக்களில் ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதிய உணவு வினியோகிக்க 73.93 கோடி ரூபாயை கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குள், மாவட்ட வாரியான மாணவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, தன் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிக்கை அடிப்படையில் நிதியுதவி நிர்ணயிக்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us