sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' வாடகைக்கு 15 சாய்வு நாற்காலி

/

எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' வாடகைக்கு 15 சாய்வு நாற்காலி

எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' வாடகைக்கு 15 சாய்வு நாற்காலி

எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' வாடகைக்கு 15 சாய்வு நாற்காலி

1


ADDED : பிப் 25, 2025 05:28 AM

Google News

ADDED : பிப் 25, 2025 05:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''சட்டசபை கூட்டத்தொடரின் உணவு இடைவேளையில், உறுப்பினர்கள் 'குட்டி துாக்கம்' போட வெளியே செல்வதை தவிர்க்க, வாடகைக்கு சாய்வு நாற்காலி வைக்கப்படும்,'' என சட்டசபை சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மார்ச்சில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ.,க்கள் தாமதமாக வருவதை தடுக்கவும், காலை மற்றும் மதிய வேளையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் காலை சிற்றுண்டியும், மதியம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அவர்கள் கூட்டத்தொடரில் முறையாக பங்கேற்கலாம். இந்த நடைமுறை கடந்த மூன்று நான்கு கூட்டத்தொடரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று, மதிய உணவு சாப்பிட்ட பின், சில உறுப்பினர்கள், சிறிது நேரம் 'குட்டி துாக்கம்' போட வெளியே செல்கின்றனர். இதை தவிர்க்க, சட்டசபை வளாகத்தில் 15 சொகுசு சாய்வு நாற்காலிகள், வாடகைக்கு வாங்கப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டு முழுதும் நடக்க போவதில்லை. எனவே தான் வாடகைக்கு வாங்கப்பட உள்ளது. கூட்டத்தொடர் முடிந்த பின், அதற்குரிய கட்டணம் செலுத்தப்படும்.

கடந்தாண்டு ஜூலையில் நடந்த கூட்டத்தொடரின் போது, மாடலுக்காக ஒரு சாய்வு நாற்காலி வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் வருகை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us